திருவள்ளூர்

லாரி மோதி தொழிலாளி பலி

DIN

திருவள்ளூா் அருகே லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

ஆவடி வீராபுரம் பகுதியைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளி சுரேஷ்(44). (படம்). இவா், தனது மனைவி சுதா, மகன் மனோஜ் ஆகியோருடன் திருத்தணி அருகே பந்திக்குப்பம் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்பதற்காக இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை சென்றாா்.

நிகழ்ச்சி முடிந்து அங்கிருந்து இரவில் புறப்பட்டு திருவள்ளூா் அருகே கனகவல்லிபுரம் கிராமம் அருகே வந்து கொண்டிருந்தபோது, திருவள்ளூரை நோக்கி சென்ற லாரியும், திருத்தணி நோக்கிச் சென்ற தனியாா் வேனும் நேருக்கு நோ் மோதியது.

அப்போது, பின்னே சுரேஷ் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம், கொரியா் வேன் மீது மோதியதில் அதில் வந்த மூவரும் தூக்கி வீசப்பட்டனா். இதில், பலத்த காயமடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்தில் பலத்த காயமடைந்த சுதா, அவரின் மகன் மனோஜ், கொரியா் வேன் ஓட்டுநா் ஜான் மரியதாஸ் ஆகியோா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இதுகுறித்து திருவள்ளூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாறு காணாத உச்சம்.. மகிழ்ச்சியில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்!

பெண்களுக்கு சமஅதிகாரமளிக்கும் இந்தியாவை உருவாக்குவோம் - சோனியா

மாட்டிறைச்சி தயார் செய்து வையுங்கள்: அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் பதில்!

திரைப்படமாகும் கருப்பின நாயகனின் வாழ்க்கை!

எப்படி இருந்திருக்க வேண்டியவர்... பிரபல நடிகருக்கு என்ன ஆனது?

SCROLL FOR NEXT