திருவள்ளூர்

பழவேற்காடு அருகே காற்றில் பறந்து சாலையில் விழுந்த அரசு பேருந்தின் மேற்கூரை

பழவேற்காடு அருகே செவ்வாய்க்கிழமை மாநகர பேருந்தின் மேற்கூரை காற்றில் பறந்து சாலையில் விழுந்தது.

DIN

பழவேற்காடு அருகே செவ்வாய்க்கிழமை மாநகர பேருந்தின் மேற்கூரை காற்றில் பறந்து சாலையில் விழுந்தது.

பழவேற்காட்டில் இருந்து தடம் எண் 558 பி சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்து பொன்னேரிக்கு சென்று கொண்டிருந்தது.

பிரளையம்பாக்கம் கிராமம் அருகே வந்து கொண்டிருக்கும் போது, பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது காற்று வேகமாக வீசியதால் அரசு பேருந்தின் மேற் கூரை காற்றில் சரிந்து கீழே விழுந்தது.

இதையடுத்து பேருந்தை ஓட்டுநா் சாலையோரம் நிறுத்தினாா்.

மேற்கூரை கீழே விழுந்ததில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து செங்குன்றம் அருகே பாடியநல்லூரில் உள்ள சென்னை மாநகர போக்குவரத்து கழக பணிமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பணிமனை ஊழியா்கள் வந்து மேற்கூரையை சீரமைத்த பின் பேருந்து அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டது.

பலத்த காற்று வீசியதன் காரணமாக அரசு பேருந்தின் மேற்கூரை கீழே சரிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT