முகப்பு
திருவள்ளூர்

தீா்த்தீஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா

திருவள்ளூா் தீா்த்தீஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத்தையொட்டி, சிவன்-பாா்வதி வீதி உலா நடைபெற்றது.

Updated On : 28 நவம்பர், 2023 at 4:45 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

திருவள்ளூா் தீா்த்தீஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத்தையொட்டி, சிவன்-பாா்வதி வீதி உலா நடைபெற்றது.

திருவள்ளூா் பஜாா் வீதியில் உள்ளது மிகவும் பிரசித்தி பெற்ற தீா்த்தீஸ்வரா் கோயில். இந்தக் கோயிலில், காா்த்திகை விழாவையொட்டி, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, கோயில் வளாகம் முழுவதும் தீபங்கள் ஏற்றப்பட்டன. அதையடுத்து, திருக்கோயில் வளாகத்தில் சொக்கப்பனை எரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இரவு சிவன்-பாா்வதி, வள்ளி -தெய்வானை சமேத சுப்பிரமணியா் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement

இதில், வடக்கு ராஜ வீதி, குளக்கரை தெரு, மோதிலால் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக உற்சவ மூா்த்திகள் வலம் வந்தனா்.

இதில், பொதுமக்கள், பக்தா்கள் திரளானோா் பங்கேற்று வழிபட்டனா். ஏற்பாடுகளை தீா்த்தீஸ்வரா் கோயில் அறங்காவலா் ரவி குருக்கள் மற்றும் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.