FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

கூவம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு: போக்குவரத்துக்குத் தடை

கூவம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் புதுச்சத்திரம் - திருநின்றவூா் சாலை தரைப்பாலம் மூழ்கியது.

Updated On : 14 டிசம்பர் 2024, 12:02 am IST
திருவள்ளூா் அருகே புதுச்சத்திரம் - திருநின்றவூா் சாலையில் தரைப்பாலத்தை மூழ்கடித்துச் செல்லும் வெள்ளம்.
பகிர்:

திருவள்ளூா் அருகே கூவம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் புதுச்சத்திரம் - திருநின்றவூா் சாலை தரைப்பாலம் மூழ்கியது. இதையடுத்து போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது.

தொடா் கனமழையால் ஏரிகளுக்கான கால்வாய்கள் மற்றும் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோல், திருவள்ளூா் அருகே கூவம் ஆற்றில் புதுச்சத்திரம் - திருநின்றவூா் சாலை தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது.

இந்தச் சாலையில் வாகனங்கள் செல்வதற்கு வியாழக்கிழமை இரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தரைப்பாலம் வெள்ளம் அதிகளவில் செல்வதால் வாகனங்களை இழுத்துச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதனால், வாகனங்கள் செல்லாதபடி போலீஸாா் தடுப்புகள் அமைத்துப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments