திருவள்ளூர்

திருவள்ளூரில் டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் உண்ணாவிரதம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட அனைத்து டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி சாலை முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு அந்த சங்கத்தின் மாவட்ட தலைவர் காஞ்சிப்பாடி பி.சரவணன் தலைமை வகித்தார். இதில் அந்தந்த வட்டார சங்க நிர்வாகிகள் மனோகர், பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அந்த சங்கத்தின் எம்.சௌக்கார் பாண்டியன் வரவேற்புரை வழங்கினார். 

அப்போது மத்திய அரசின் புதிய சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தில் உடனே சவுண்டு மணல் குவாரிகளை தொடங்க வேண்டும். வாகனங்களுக்கு ஆன்லைன் பொய் வழக்கு போடக்கூடாது என்பன  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில் நிறைவாக அந்த சங்கத்தின் பொருளாளர் ஆர்.வெங்கட் நன்றி கூறினார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்னையர் நாள்: தலைவர்கள் வாழ்த்து!

உலக செவிலியர் நாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

திருப்பதி செல்வோர் கவனத்துக்கு...முக்கிய அறிவிப்பு!

பத்ரிநாத் கோயில் நடை இன்று திறப்பு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT