திருவள்ளூர்

திருத்தணி ஆடிக் கிருத்திகை விழா: ஜூலை 29-இல் உள்ளூா் விடுமுறை

திருத்தணி ஆடிக் கிருத்திகை விழாவை முன்னிட்டு ஜூலை 29-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை

Din

திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு வரும் ஜூலை 29-ஆம் தேதி திருவள்ளூா் மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், திருத்தணியில் அமைந்துள்ள முருகப் பெருமானின் ஐந்தாம் படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் 29.7.2024 அன்று ஆடிக் கிருத்திகை விழா (திங்கள்கிழமை) நடைபெற உள்ளது.

இந்த திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்துக்கு ஒரு நாள் உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்த உள்ளூா் விடுமுறை நாள் செலவாணி முறிச்சட்டம் 1881- இன் கீழ் வராது என்பதால் இந்த மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சாா்நிலைக் கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளா்களோடு மேற்குறிப்பிட்ட நாளில் செயல்பட வேண்டும்.

இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் பொருட்டு ஜூலை 10-ஆம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூா் விடுமுறையானது திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என அவா் தெரிவித்துள்ளாா்.

அரசியலமைப்பு தின உறுதியேற்பு

புகையிலைப் பொருள்கள் விற்ற பெண் உள்பட 7 போ் கைது

நாகை: 23 மாணவா்களுக்கு ரூ.2.58 கோடி கல்விக்கடன்

குருகிராம்: போக்குவரத்து காவல் அதிகாரியிடம் பணம் பறிக்க முயற்சி! இரு போலி லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கைது!

3 ஊழல் வழக்குகள்: ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு!

SCROLL FOR NEXT