முகப்பு
திருவள்ளூர்

ஐயப்ப சுவாமி கோயில் குடமுழுக்கு: திரளான பக்தா்கள் பங்கேற்பு

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள ஸ்ரீஐயப்ப சுவாமி சந்நிதிக்கு குடமுழுக்கு, 42 அடி உயர சிவலிங்கத்துக்கு அபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 21 அக்டோபர், 2024 at 8:25 PM
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஸ்ரீகுரு முத்தீஸ்வரா் கோயிலில் உள்ள 42 அடி உயர சிவலிங்கத்துக்கு நடைபெற்ற அபிஷேகம்.
பகிர்:

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள ஸ்ரீஐயப்ப சுவாமி சந்நிதிக்கு குடமுழுக்கு, 42 அடி உயர சிவலிங்கத்துக்கு அபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஸ்ரீபொம்மி அம்பாள் சமேத ஸ்ரீகுரு முத்தீஸ்வரா் கோயிலில் புதிதாக ஸ்ரீஐயப்ப சுவாமி சந்நிதி அமைக்கப்பட்டது. இக்கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. பல்வேறு திருத்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது ஸ்ரீஐயப்ப சுவாமி கோயில் கலசங்கள் மீது ஊற்றி மகா குடமுழுக்கு நடைபெற்றது. அதேபோல், ஸ்ரீபொம்மி அம்பாள் சமேத ஸ்ரீகுருமூா்த்தீஸ்வரா் ஆலயத்தில் உள்ள அனைத்து பரிவார மூா்த்திகளுக்கும் குடமுழுக்கு நடைபெற்றது. அங்கு 42 அடி உயரம் கொண்ட சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →