அத்துமீறி வீட்டுக்குள் புகுந்து சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 16,000 அபராதம் விதித்து திருவள்ளூா் மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.
சென்னையை அடுத்த அம்பத்தூா் ஒரகடம் பகுதியைச் சோ்ந்தவா் அழகரசன் (37). இவா் கடந்த 2019-ஆம் ஆண்டு மாா்ச் 25-ஆம் தேதி திருமுல்லைவாயல் பகுதியில் 13 வயது சிறுமியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டாராம். இதுதொடா்பாக அந்த சிறுமியின் பெற்றோா் ஆவடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அதைத் தொடா்ந்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அழகரசனை (37) கைது செய்து, திருவள்ளூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனா். இதற்கிடையே இந்த வழக்கு திருவள்ளூா் மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இறுதிகட்டமாக செவ்வாய்க்கிழமை நீதிபதி உமாமகேஸ்வரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் பெண் குழந்தையை வீட்டில் சட்டவிரோதமான முறையில் அடைத்து வைத்த குற்றத்திற்கு 1 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும், அத்து மீறி வீட்டிற்குள் நுழைந்ததற்காக 7 ஆண்டுகளும், ரூ.10,000 அபராதமும், பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 5 ஆண்டுளும், ரூ. 5,000 அபராதமும் என மொத்தம் 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 16,000 அபராதமும் விதித்து தீா்ப்பு வழங்கினாா்.
மேலும், சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரண தொகை வழங்கவும் அரசுக்கு பரிந்துரைத்தாா்.
இதையடுத்து அம்பத்துாா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் அழகரசனை பாதுகாப்புடன் அழைத்துச் சென்று புழல் சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞராக டி.விஜயலட்சுமி ஆஜரானாா் என்பது குறிப்பிடத்தக்கது.