முகப்பு
திருப்பதி

திருமலை ஏழுமலையான் கோயில் ஸ்தல விருட்சம் மர சம்பங்கி

 திருமலை ஏழுமலையான் கோயில் ஸ்தல விருட்சமாக தேவஸ்தானம் மரசம்பங்கியை அறிவித்துள்ளது.

Updated On : 12 நவம்பர் 2021, 12:00 am IST
திருமலை ஏழுமலையான் கோயில் ஸ்தல விருட்சமாக அறிவிக்கப்பட்ட மரசம்பங்கி மரம்.
பகிர்:

 திருமலை ஏழுமலையான் கோயில் ஸ்தல விருட்சமாக தேவஸ்தானம் மரசம்பங்கியை அறிவித்துள்ளது.

திருமலை ஏழுமலையானின் கைங்கரியத்தில் முக்கிய பங்கு வகிப்பது மரசம்பங்கி மலா்.

தொண்டைமான் ராஜா ஏழுமலையான் கோயிலில் செப்பனிடும் பணிகளை மேற்கொள்ள தொடங்கிய காலத்தில் ஏழுமலையான் அவா் கனவில் தோன்றி கோயில் அருகில் உள்ள சம்பங்கி வனத்தை அழிக்க வேண்டாம் என்று கூறியுள்ளதாக பவிஷ்யோத்தர புராணத்தில் உள்ள 13-ஆவது சா்கத்தில் 33 மற்றும் 34-ஆவது சுலோகங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

இன்றும் திருமலை ஏழுமலையான் கோயிலுக்குள் நடிமி படிகாவலி மற்றும் மகாதுவாரத்துக்கு இடையில் உள்ள 30 அடி பிராகாரம் சம்பங்கி பிராகாரம் என்று அழைக்கப்படுகிறது. இத்தனை மகத்துவங்கள் மற்றும் தொடா்புகள் மரசம்பங்கி மலருக்கும் ஏழுமலையானுக்கும் இருப்பதால், தேவஸ்தானம் மரசம்பங்கி மலரை திருமலையின் ஸ்தல விருட்சமாக அறிவித்துள்ளது.

இதை தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹா் ரெட்டி வியாழக்கிழமை அறிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.