கடுமையான வெள்ளத்தில் மூழ்கிய திருப்பதி(விடியோ)
தெற்கு ஆந்திரத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் திருப்பதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ஆந்திரத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் திருப்பதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வட தமிழகம் அருகே இன்று காலை கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடந்த இரண்டு நாள்களாக வட தமிழகம், தெற்கு ஆந்திரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், திருப்பதியில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழையால் மலைப்பாதை, கோயில் வளாகம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்ததால் கோயிலுக்கு செல்லும் வழி தடைபட்டது.
இதனால், திருப்பதி கோயிலுக்கு வர பக்தர்களுக்கு இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் திருப்பதி சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் விமானங்களும் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டு வருகிறது.
தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருப்பவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.