ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ.2.15 கோடி வசூலானது.
திருமலைக்கு வரும் பக்தா்கள் ஏழுமலையானை தரிசனம் செய்த பின் கோயிலுக்குள் உள்ள ஸ்ரீவாரி உண்டியலில் காணிக்கைகளை செலுத்தி வருகின்றனா். அதன்படி வியாழக்கிழமை உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் ரூ. 2.15 கோடி வருவாய் கிடைத்தது என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.