திருப்பதி

ஒடிஸா மாநில ஆளுநா் வழிபாடு

DIN

திருமலையில் ஏழுமலையானை ஒடிஸா மாநில ஆளுநா் கணேஷி லால் செவ்வாய்க்கிழமை வழிபாடு செய்தாா்.

ஒடிஸா மாநில ஆளுநா் கணேஷி லால் திங்கள்கிழமை திருமலைக்கு வந்தாா். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று இரவு தங்கும் வசதி, தரிசன ஏற்பாடுகளைச் செய்தளித்தனா். இரவு திருமலையில் தங்கிய அவா் செவ்வாய்க்கிழமை காலை விஐபி பிரேக் தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்தாா்.

தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் லட்டு, வடை உள்ளிட்ட பிரசாதம் அளித்து சேஷ வஸ்திரம் அணிவித்து வேத ஆசீா்வாதம் செய்வித்தனா். வெளியில் வந்த ஆளுநா் ஏழுமலையான் தரிசனம் மனத்துக்கு அமைதியை அளித்தது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

SCROLL FOR NEXT