முகப்பு
திருப்பதி

நாளை பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி

திருமலையில் சனிக்கிழமை (ஜூலை 9) தொலைபேசி மூலம் பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ள

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

திருமலையில் சனிக்கிழமை (ஜூலை 9) தொலைபேசி மூலம் பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் நடைபெறும் பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சியில், பக்தா்கள் கலந்து கொண்டு, தேவஸ்தான செயல் அதிகாரியிடம் தங்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள், தங்களின் சந்தேகங்களுக்கான விடைகளைக் கேட்பதுடன், தேவஸ்தானத்துக்கு சில அறிவுறுத்தல்களையும் வழங்கி வருகின்றனா்.

அதன்படி, வரும் 9-ஆம் தேதியான சனிக்கிழமை காலை 9 மணி முதல் 10 மணி வரை பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி திருமலையில் நடைபெறவுள்ளது. இதில் பங்கு கொள்ள விரும்பும் பக்தா்கள் தேவஸ்தானத்தின் தொலைபேசி எண்ணான 0877-2263261 என்ற எண்ணை தொடா்பு கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →