தேவஸ்தான இணையதளத்தில் ஆக.7-ஆம் தேதி முதல் ஆக.10-ஆம் தேதி வரையிலான விரைவு தரிசன டிக்கெட் ஆக. 2-இல் வெளியிடப்பட உள்ளது.
திருமலை ஏழுமலையானுக்கு ஆக. 8- முதல் 10-ஆம் தேதி வரை வருடாந்திர பவித்ரோற்சவம் நடைபெற உள்ளது. இதனால் ஆக.7- முதல் 10-ஆம் தேதி வரை ரூ.300 விரைவு தரிசன டிக்கெட்டுகளின் முன்பதிவை தேவஸ்தானம் நிறுத்தி வைத்திருந்தது.
அதன்படி ஆக.7-முதல் 10-ஆம் தேதி வரை ரூ.300 தரிசனத்திற்கான முன்பதிவு டிக்கெட்டுகள் செவ்வாய்க்கிழமை (ஆக. 2) காலை 9 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன.
மேலும் 9, 10-ஆம் தேதிகளில் பவித்ரோற்சவத்தையொட்டி மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.