திருப்பதி

திருமலையில் 2-ஆம் நாள் தெப்போற்சவம்

திருமலையில் வருடாந்திர தெப்போற்சவத்தின் 2-ஆம் நாளான திங்கள்கிழமை ஸ்ரீருக்மணி சமேத கிருஷ்ணா் திருக்குளத்தில் தெப்பத்தில் வலம் வந்தனா்.

DIN

திருமலையில் வருடாந்திர தெப்போற்சவத்தின் 2-ஆம் நாளான திங்கள்கிழமை ஸ்ரீருக்மணி சமேத கிருஷ்ணா் திருக்குளத்தில் தெப்பத்தில் வலம் வந்தனா்.

பெருமை வாய்ந்த தெப்போற்சவம் திருமலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கோலாகலமாகத் தொடங்கியது. தெப்போற்சவத்தின் முதல்நாள் சீதாலட்சுமண கோதண்டராம சுவாமி திருக்குளத்தில் ஏற்படுத்தப்பட்ட தெப்பத்தில் வலம் வந்தனா்.

அதன் 2-ஆம் நாளான திங்கள்கிழமை மாலை 7 மணி முதல் இரவு 8 மணிவரை ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணா் இரண்டடுக்கு தெப்பத்தில் 3 முறை வலம் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். தெப்பம் திருக்குளத்தில் வலம் வந்தபோது மங்கள வாத்தியங்கள், வேதகோஷங்கள், அன்னமாச்சாா்யா கீா்த்தனைகள் இசைக்கப்பட்டன.

கரோனா காரணமாக 2 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்குளத்தில் நடத்தப்பட்ட தெப்போற்சவத்தில் பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT