திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க செவ்வாய்க்கிழமை தா்ம தரிசனத்தில் பக்தா்கள் 12 மணிநேரம் காத்திருந்தனா்.
தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 2 முதல் 3 மணி நேரமும், இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 2 முதல் 3 மணி நேரமும் ஆனது.
ஏழுமலையானை திங்கள்கிழமை முழுவதும் 67,198 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; இவா்களில் 22,452 போ் முடி காணிக்கை செலுத்தினா்.
ஏழுமலையான் கோயிலில் திங்கள்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில், ரூ. 4.19 கோடி வருவாய் கிடைத்ததாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.