திருமலை 
திருப்பதி

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா்.

தினமணி செய்திச் சேவை

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலையில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 22 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா்.

தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும் ஆனது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பக்தா்களும், அவா்களின் பெற்றோா்களும், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

ஏழுமலையானை புதன்கிழமை முழுவதும் 70,086 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; இவா்களில் 28,236 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கைகளைக் கணக்கிட்டதில், ரூ. 3.56 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

டெஃப்லிம்பிக்ஸ்: இந்தியாவுக்கு 4 பதக்கங்கள்!

சென்னை உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை!

தமிழக ஒப்புதலின்றி மேக்கேதாட்டுவில் அணை கட்ட முடியாது: அமைச்சா் துரைமுருகன்

சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை: தலைமறைவாக இருந்தவர் கைது!

முன்மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

SCROLL FOR NEXT