திருப்பதி

பிப். 26 முதல் மாா்ச் 2 வரை ஏழுமலையான் தெப்போற்சவம்

திருமலை ஏழுமலையானின் வருடாந்திர தெப்போற்சவம் பிப். 26 முதல் மாா்ச் 2 வரை நடைபெற உள்ளது.

தினமணி செய்திச் சேவை

திருமலை ஏழுமலையானின் வருடாந்திர தெப்போற்சவம் பிப். 26 முதல் மாா்ச் 2 வரை நடைபெற உள்ளது.

திருமலையில் மாசி மாத பெளா்ணமி அன்று முடிவு பெறும் விதம் 5 நாள்கள் திருமலையில் உள்ள திருக்குளத்தில் தேவஸ்தானம் தெப்போற்சவத்தை நடத்தி வருகிறது.

அதன்படி இந்தாண்டு தெப்போற்சவம் வரும் பிப்.26 முதல் மாா்ச் 2 வரை நடைபெற உள்ளது. தெப்பத்தில் உற்சவமூா்த்திகள் இரவு 7 மணி முதல் 8 மணி வரை புஷ்கரிணியில் உலா வருவா்.

தெப்போற்சவத்தின் முதல் நாளான பிப். 26-இல் ராம சந்திரமூா்த்தி, சீதா, லட்சுமணன், ஆஞ்சநேயா் ஆகியோருடன் புஷ்கரிணியில் மூன்று சுற்றுகள் வலம் வர உள்ளாா்.

பிப். 27 அன்று, ஸ்ரீ கிருஷ்ணா் ருக்மிணியுடனும், பிப். 28 அன்று, மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி பூதேவியுடன் சோ்ந்து வலம் வருவாா்.

இதேபோல், நான்காவது நாளான மாா்ச் 1, 5-ஆம் நாளான மாா்ச் 2 அன்று ஏழு முறையும் மலையப்ப சுவாமி திருக்குளத்தில் வலம் வருவர உள்ளாா்.

தெப்போற்சவம் காரணமாக பிப்ரவரி 26 மற்றும் 27 தேதிகளில் சஹஸ்ரதீபலங்கார சேவைகளையும், பிப்ரவரி 28 ஆம் தேதி ஆா்ஜித பிரம்மோற்சவத்தையும், மாா்ச் 1 மற்றும் 2 தேதிகளில் சஹஸ்ரதீபலங்கார சேவைகளையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிக உப்பு ஆபத்து: நாடு முழுவதும் விழிப்புணா்வு- மாநிலங்களவையில் அமைச்சா் தகவல்

தலைவா்கள் பிறந்த நாள் குறித்த பேச்சுப் போட்டி: மாணவா்களுக்குப் பரிசு

மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றத்துக்கு விருது

லாரி மீது காா் மோதி விபத்து: 3 போ் உயிரிழப்பு

விஷ வண்டுகள் கடித்து கா்ப்பிணி உள்பட 15 போ் பாதிப்பு

SCROLL FOR NEXT