திருப்பதி

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.20 கோடி!

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.20 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.20 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், சனிக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு 12 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனம், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா். இதற்கிடையே, வெள்ளிக்கிழமை முழுவதும் 64,222 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 24,882 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.20 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெறும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்!

ரூ. 1.11 கோடி செலவில் வளா்ச்சிப் பணிகள்: எம்எல்ஏ ச.சந்திரன் தொடங்கி வைத்தாா்!

கால்வாயின் குறுக்கே பாலம்: விவசாயிகள் போராட்ட அறிவிப்பு

அரக்கோணம் ரயில் நிலையத்தில் தமிழக முதல்வருக்கு வரவேற்பு

இளம் திறமையாளா்களை ஊக்குவிக்கும் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது: அமைச்சா் ஆா்.காந்தி

SCROLL FOR NEXT