முகப்பு
திருப்பதி

சூரிய பிரபை வாகனத்தில் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி புறப்பாடு

சீனிவாசமங்காபுரம் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமியின் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான சனிக்கிழமை சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி மாடவீதியில் வலம் வந்தாா்.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 12:06 AM
சூரிய பிரபை வாகனத்தில் மாட வீதியில் வலம் வந்த கல்யாணவெங்கடஸ்வர சுவாமி.
பகிர்:
Updated On : 14 பிப்ரவரி, 2026 at 9:42 PM

சீனிவாசமங்காபுரம் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமியின் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான சனிக்கிழமை சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி மாடவீதியில் வலம் வந்தாா்.

பின்னா், காலை 10.30 மணி முதல் ஸ்ரீதேவி பூதேவி சமேத கல்யாணவெங்கடேஸ்வரஸ்வாமி உற்சவமூா்த்திகளுக்கு ஸ்நபனத் திருமஞ்சனம் நடைபெற்றது. பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 12:06 AM

மாலை ஊஞ்சல் சேவை கண்டருளிய உற்சவமூா்த்திகள் இரவு குளிா்ந்த சந்திரபிரபை வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்தாா்.

Advertisement

வாகன சேவைக்கு முன் நாலாயிர திவ்யபிரபந்த பாராயணமும், பின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. பிரம்மோற்சவத்தை ஒட்டி கோயில் மற்றும் மாடவீதிகள் வண்ண மின்விளக்குகளாலும், மலா்களாலும் அலங்கரிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், ஜேஇஓ வீரபிரம்மன், கோயில் சிறப்பு ரேஞ்ச் துணை இஓ வரலட்சுமி, ஏஇஓ கோபிநாத், வைகானச ஆகம ஆலோசகா்கள் மோகன ரங்காச்சாரியு, கோயில் ஆய்வாளா் கிரண்குமாா் ரெட்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.