மாசித் திருவிழா: தங்க சூரிய பிரபை வாகனத்தில் காமாட்சி அம்மன்!
காமாட்சி அம்மன் ராஜவீதிகளில் வீதி உலா வந்தது பற்றி..
காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தின் மாசி மக நான்காம் நாள் உற்சவத்தில் தங்க சூரிய பிரபை வாகனத்தில் லட்சுமி சரஸ்வதி தேவியுடன் காமாட்சி அம்மன் ராஜவீதிகளில் வீதி உலா வந்தார்.
சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தின் மாசி மக பிரம்மோற்சவம் கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த மூன்று நாள்களாக காலை மாலை வேளைகளில் காஞ்சி காமாட்சி அம்மன் லக்ஷ்மி தேவி சரஸ்வதியுடன் பல்வேறு வாகனங்களில் காஞ்சிபுரம் ராஜ வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.
இந்த நிலையில், இன்று நான்காம் நாள் காலை உற்சவத்தில் தங்கச் சூரிய பிரபை வாகனத்தில் மெரூன் பட்டு உடுத்தி மனோரஞ்சிதம் உள்ளிட்ட மலர்களால் சிறப்பு அலங்காரத்துடன் லட்சுமி சரஸ்வதி தேவியுடன் ராஜ வீதிகளில் வலம் ஒன்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
Advertisement
Advertisement
சங்கர மடம் அருகே காஞ்சி சங்கர மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சி காமாட்சி அம்பாளுக்குப் பழங்கள் வைத்து சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்டார். மேலும் தங்க ஜடை, சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை மனம் உருகி வேண்டிச் சிறப்புத் தீப ஆராதனையைத் தரிசித்தார். இதனைத் தொடர்ந்து குங்கும பிரசாதம், அன்னதான பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.