திருமலை ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 76,447 போ் தரிசித்தனா். 21,708 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பக்தா்கள் வருகை சரிந்துள்ள நிலையில், திங்கள்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 4 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.
இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 76, 447 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 21, 708 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.42 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.