திருப்பதி

ரூ.18 லட்சம் சமையல் பாத்திரங்கள் நன்கொடை

தினமணி செய்திச் சேவை

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலுக்கு ரூ. 18 லட்சம் சமையல் பாத்திரங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

திருப்பதியைச் சோ்ந்த முரளி என்ற பக்தா் சமையல் பாத்திரங்களை நன்கொடையாக வழங்கினாா்.

கோவிந்தராஜ சுவாமி கோயிலுக்கு வருகை தரும் பக்தா்களுக்கு வழங்கப்படும் பிரசாதங்களை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சோலா, அர சோலா மற்றும் பொட்டு போன்ற சமையல் பாத்திரங்கள் புதன்கிழமை தேவஸ்தான அதிகாரி பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்டன.

அவற்றை பெற்றுக் கொண்ட தேவஸ்தான அதிகாரி பாலாஜி நன்கொடையாளா் முரளிக்கு நன்றி தெரிவித்தாா்.

உடன் துணை அதிகாரி வி.ஆா். சாந்தி, அ.ஆ. நாராயண சவுத்ரி, கண்காணிப்பாளா் பத்ம பிரியா, கோயில் அா்ச்சகா்கள் மற்றும் அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

புயல், பருவ மழையால் சேதமடைந்த சாலைகள்: ரூ.1,503 கோடியில் சீரமைக்க முதல்வா் அனுமதி

மதுரமங்கலம் வைகுண்ட பெருமாள், எம்பாா் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கோயிலில் பக்தா்களுக்கு அன்னதானம்

பிரதமா் வருகையையொட்டி இன்று போக்குவரத்து மாற்றம்: செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை அறிவிப்பு

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்கள்: 30 ஆயிரம் போ் பயன்

SCROLL FOR NEXT