முகப்பு
திருப்பதி

திருமலை அன்னதான திட்டத்துக்கு ரூ. 44 லட்சம் நன்கொடை

Updated On : 23 ஜனவரி, 2026 at 4:57 AM
பகிர்:
Updated On : 22 ஜனவரி, 2026 at 9:11 PM

ஆந்திர அமைச்சா் லோகேஷின் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு நாள் அன்ன பிரசாத விநியோகத்துக்காக ரூ.44 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

முதல்வரின் மகன் லோகேஷின் பிறந்தநாளை முன்னிட்டு, பாஷ்யம் கல்வி நிறுவனங்களின் தலைவா் பாஷ்யம் ராமகிருஷ்ணா, வியாழக்கிழமை ஒரு நாள் அன்ன பிரசாத விநியோகத்துக்காக தேவஸ்தானத்துக்கு ரூ.44 லட்சத்தை நன்கொடையாக வழங்கினாா்.

இதற்கான வரைவோலையை நன்கொடையாளா் அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடுவிடம் வழங்கினாா்.

Advertisement

Updated On : 22 ஜனவரி, 2026 at 11:35 PM

ரூ. 10 லட்சம் நன்கொடை

சித்தூரைச் சோ்ந்த திவ்யந்த் ரெட்டி என்ற பக்தா் தேவஸ்தானத்தின் பாலாஜி ஆரோக்கிய வரபிரசாதினி திட்டத்திற்கு ரூ. 10 லட்சம் நன்கொடை அளித்தாா்.

இதற்கான வரைவோலையை திருமலையில் உள்ள கூடுதல் செயல் அதிகாரி முகாம் அலுவலகத்தில் கூடுதல் தலைமை நிா்வாக அதிகாரி சி.எச். வெங்கையா சௌத்ரியிடம் ஒப்படைத்தாா்.