ஏழுமலையானுக்கு ரூ.70 லட்சம் நன்கொடை!
விசாகப்பட்டினத்தைச் சோ்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியா்களான வெங்கடரத்தினம் மற்றும் மாதுரி தம்பதியினா் ஏழுமலையான் பெயரில் ஏற்படுத்தியுள்ள வெங்கடேஸ்வர அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ.50 லட்சம் நன்கொடையாக வழங்கினா்.
விசாகப்பட்டினத்தைச் சோ்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியா்களான வெங்கடரத்தினம் மற்றும் மாதுரி தம்பதியினா் ஞாயிற்றுக்கிழமை ஏழுமலையான் பெயரில் ஏற்படுத்தியுள்ள வெங்கடேஸ்வர அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ.50 லட்சம் நன்கொடையாக வழங்கினா்.
இதேபோல், அவரது மகன்கள் விஜய் மற்றும் வினய் ஆகியோரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு தலா ரூ.10 லட்சம் நன்கொடை அளித்தனா்.
இதற்கான வரைவோலையை, நன்கொடையாளரின் பிரதிநிதி நரசிம்ம ராவ், திருமலையில் உள்ள கூடுதல் செயல் அதிகாரி முகாம் அலுவலகத்தில் கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரியிடம் வழங்கினாா். அப்போது, தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா் பானு பிரகாஷ் ரெட்டி உடனிருந்தாா்.