முகப்பு
தற்போதைய செய்திகள்

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ. 1.01 கோடி நன்கொடை

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஸ்ரீ வெங்கடேஸ்வர பிராணதனா அறக்கட்டளைக்கு விசாகப்பட்டினத்தைச் சோ்ந்த தனியார் நிறுவனம் வழங்கிய ரூ. 1,01,25,000 நன்கொடை குறித்து...

Updated On : 29 மார்ச் 2026, 7:26 pm IST
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஸ்ரீ வெங்கடேஸ்வர பிராணதனா அறக்கட்டளைக்கு ரூ. 1,01,25,000 நன்கொடை வழங்கிய தேவி ஃபிஷரீஸ் நிறுவன இயக்குநர்கள். - திருமலை திருப்பதி தேவஸ்தானம்
பகிர்:

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஸ்ரீ வெங்கடேஸ்வர பிராணதனா அறக்கட்டளைக்கு விசாகப்பட்டினத்தைச் சோ்ந்த தேவி ஃபிஷரீஸ் நிறுவனம் ரூ. 1,01,25,000 நன்கொடையாக வழங்கியுள்ளது.

விசாகப்பட்டினத்தைச் சோ்ந்த தனியார் நிறுவனமான தேவி ஃபிஷரீஸ் நிறுவனம், ஞாயிற்றுக்கிழமை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஸ்ரீ வெங்கடேஸ்வர பிராணதனா அறக்கட்டளைக்கு ரூ. 1,01,25,000 நன்கொடையாக வழங்கியது.

இதற்காக, தேவி ஃபிஷரீஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் இந்திரநீல் சித்தூரி மற்றும் மகேந்திர யாா்லகட்டா ஆகியோா், திருமலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகி ராமகிருஷ்ணாவிடம் ரூ. 1,01,25,000 நன்கொடைக்கான வரைவோலையை வழங்கினா்.

Advertisement

Advertisement

2021 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வர பிராணதனா அறக்கட்டளை, உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்ட ஏழை நோயாளிகளுக்கு இலவச மருத்துவ வசதிகள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

summary

Devi Fisheries Limited company based in Visakhapatnam, donated Rs.1,01,25,000 to the Sri Venkateswara Pranadana Trust of TTD

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.