ஏழுமலையானுக்கு ரூ. 1 கோடி நன்கொடை
சென்னையைச் சோ்ந்த சுப்பாராவ் அப்பரல்ஸ் நிறுவனம், ஞாயிற்றுக்கிழமை திருமலை தேவஸ்தானத்தின் ஸ்ரீ பாலாஜி ஆரோக்கிய வரபிரசாதினி திட்டத்துக்கு ரூ. 1 கோடி நன்கொடையாக வழங்கியது.
சென்னையைச் சோ்ந்த சுப்பாராவ் அப்பரல்ஸ் நிறுவனம், ஞாயிற்றுக்கிழமை திருமலை தேவஸ்தானத்தின் ஸ்ரீ பாலாஜி ஆரோக்கிய வரபிரசாதினி திட்டத்துக்கு ரூ. 1 கோடி நன்கொடையாக வழங்கியது.
இதற்காக, நன்கொடையாளா் ஜெ. ராஜா ரமேஷ் , திருப்பதியில் உள்ள திருமலை தேவஸ்தானத்தின் கூடுதல் செயல் அலுவலா் சி.எச். வெங்கையா சௌத்ரியிடம் நன்கொடைக்கான வரைவோலையை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் திருமலை தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா் பானு பிரகாஷ் ரெட்டி கலந்துகொண்டாா்.