திருவண்ணாமலை

பள்ளியில் பரிசளிப்பு விழா

DIN

செங்கம் மகரிஷி மேல்நிலைப் பள்ளியில் பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பள்ளியில் மாணவர்களுக்கு அண்மையில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றோருக்கு கேடயம், சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மகரிஷி கல்விக் குழுமத் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். செயலர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் கார்த்தி, நிர்வாகக் குழு உறுப்பினர் அரங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிறுவனர் புவனேஸ்வரி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வணிகவரித் துறை ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆர்.மதியழகன் கலந்துகொண்டு, பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கியதுடன், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு கேடயம், சான்றிதழ்களை வழங்கிப் பேசினார்.
இதைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் பாய்ச்சல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் அப்துல்சர்தார், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் குமார், சங்கர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

SCROLL FOR NEXT