திருவண்ணாமலை

கண்ணமங்கலத்தில் தேசிய நூலகர் தினவிழா

DIN

ஆரணியை அடுத்த கண்ணமங்கலத்தில் உள்ள மாவட்டக் கிளை நூலகத்தில் தேசிய நூலகர் தினவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
கண்ணமங்கலத்தில் உள்ள மாவட்டக் கிளை நூலகத்தில் சனிக்கிழமை நூலகத் தந்தை டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதன் பிறந்த நாள் விழாவை நூலகர் தினவிழாவாகக் கொண்டாடினர். விழாவுக்கு வாசகர் வட்டத் தலைவர் பி.சி.கார்த்திகேயன் தலைமை வகித்தார்.
இதையொட்டி, மின்வாரிய இளநிலை பொறியாளர் ஏ.ஜி.ஜெகதீசன், பி.சி.குமாரசாமி, கே.டி.ரத்னமாலா, கே.டி.சக்திமாலா, பி.நவநீதசுந்தர், ஆனந்தன், வேலூர் சிஎம்சி பணியாளர் பி.கே.அன்பரசி ஆகியோர் ரூ.1,000 செலுத்தி நூலகத்தில் புரவலர்களாக சேர்ந்தனர்.
மேலும், நூலகத்துக்குத் தேவையான தளவாட பொருள்களை பொதுமக்களிடம் நன்கொடையாக பெறுதல், நூலகத்தில் மேலும் உறுப்பினர்களையும், புரவலர்களையும் சேர்ப்பதுடன், பொதுமக்கள் அறிவுசார் நூல்களை படித்து பயன்பெற வழிவகை செய்தல் என்பன உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மின்வாரிய இளநிலை பொறியாளர் ஏ.ஜி.ஜெகதீசன் கலந்து கொண்டார். மேலும், வாசகர் வட்டச் செயலர் இ.பூங்கொடிசெல்வன், நூலகர் சிவசங்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT