திருவண்ணாமலை

சூறைக்காற்றில் சாய்ந்த மின் கம்பங்களை சீரமைக்கக் கோரிக்கை

DIN

வேட்டவலம் பகுதியில் சூறாவளிக் காற்றினால் சாய்ந்த மின் கம்பங்களை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
வேட்டவலத்தை அடுத்த அணுக்குமலை பகுதியில் கடந்த வாரம் சூறாவளிக் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது, பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்தன. குறிப்பாக, வேட்டவலம் - நெய்வாநத்தம் சாலையில் மட்டும் 5 மின் கம்பங்கள் உடைந்து விழுந்தன.
இந்த மின் கம்பங்கள் சீரமைப்படாததால், விவசாயம் செய்ய முடியாமலும், குடிநீர் கிடைக்காமலும் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சூறாவளிக் காற்றினால் சாய்ந்த மின் கம்பங்களை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

தமிழக, கேரள கடலோரப் பகுதிகளில் முதல் முறையாக அதீத அலை எச்சரிக்கை!

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

SCROLL FOR NEXT