வந்தவாசியை அடுத்த தேசூரில் ரொக்கமில்லா பண பரிமாற்றம் குறித்த விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தேசூர் கிளை சார்பில் நடந்த இந்த முகாமுக்கு கிளை மேலாளர் ஏ.ஸ்ரீதர் தலைமை வகித்தார். பெரணமல்லூர் கள மேலாளர் கே.விஜயா, ரொக்கமில்லா பண பரிமாற்றம் குறித்து பேசினார்.
பெரணமல்லூர் சரக மேற்பார்வையாளர் ந.மனோகரன், வங்கியின் கடன் சேவைகள் குறித்து பேசினார். முகாமில் வங்கியின் வாடிக்கையாளர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர், பொதுமக்கள் பங்கேற்றனர். வங்கி காசாளர் எ.முருகேசன் நன்றி கூறினார்.