திருவண்ணாமலை

காவல் நண்பர்களுக்கு அடையாள அட்டைகள்

DIN

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல் நண்பர்களுக்கு இலவசச் சீருடை, அடையாள அட்டைகள் வழங்கும் விழா
திங்கள்கிழமை  நடைபெற்றது.
திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு திருவண்ணாமலை மாவட்டக் காவல் நண்பர்கள் குழுவின் மாவட்டத் தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்டத் துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆசிரியர் ஜி.ஜான்கின்ஸ்லி, வழக்குரைஞர் பாபு, ஆசிரியர் சு.சிவப்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளித் தலைமை ஆசிரியர் பி.ஹூபர்ட் தனசுந்தரம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு காவல் நண்பர்கள் குழுவில் புதிதாக சேர்ந்த 130 பேருக்கு அடையாள அட்டைகள், இலவச சீருடைகளை வழங்கினார். நிகழ்வில் காவல் நண்பர்கள் குழு நிர்வாகிகள் ஏ.தியாகராஜ், இரா.ராஜசேகர், முதுகலை ஆசிரியர் ஏ.ஜெய்பிலிப்ஸ், கே.மல்லிகார்ஜுன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT