திருவண்ணாமலை

திருமணியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

DIN

ஆரணியை அடுத்த திருமணி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் 2016 } 17ஆம் ஆண்டுக்கான சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மூத்த உறுப்பினர் டி.சம்பத் தலைமை வகித்தார். செய்யாறு உதவிப் பொறியாளர் வெங்கடாஜலபதி, பணி மேற்பார்வையாளர் ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சிச் செயலர் திருமலை வரவேற்றார்.
கூட்டத்தில், ரூ.53 லட்சம் செலவில் பெரிய ஏரி, சித்தேரி தூர்வாரியது மற்றும் கிராம சேவை மையக் கட்டடம் கட்டியதற்கான அறிக்கையை வட்டார வள அலுவலர் க.விசாகமூர்த்தி சமர்ப்பித்தார்.
மாவட்ட வள அலுவலர் (பொறுப்பு) டி.பிரபு, திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார். கூட்டத்தில் பணித்தள பொறுப்பாளர்கள் அமுதா, ருக்குமணி, சுமித்ரா, மகளிர் குழுவைச் சேர்ந்த லோகநாயகி, அமுதா, சிறப்பு எழுத்தர் கவிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

யாரோ பிரிகிற்பவரே?

SCROLL FOR NEXT