திருவண்ணாமலை

ஜெயலலிதா 2-ஆம் ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிப்பு

DIN

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில், புதன்கிழமை அவரது உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
ஜெயலலிதாவின் 2-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில், அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா படத்துடன் கூடிய வாகனத்துடன் திருவண்ணாமலை காமராஜர் சிலை அருகில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்துக்கு தெற்கு மாவட்டச் செயலர் பெருமாள் நகர் கே.ராஜன் தலைமை வகித்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்த ஊர்வலம், திருவண்ணாமலை - வேலூர் சாலையில் உள்ள தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நிறைவடைந்தது.
இதைத் தொடர்ந்து, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப் படத்துக்கு அதிமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுகவினருக்கு தெற்கு மாவட்டச் செயலர் பெருமாள் நகர் கே.ராஜன் அன்னதானம் வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவர் அன்பழகன், நகர்ப்புற கூட்டுறவு வங்கித் தலைவர் டிஸ்கோ எஸ்.குணசேகர், முன்னாள் எம்எல்ஏ சுரேஷ்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்டச் 
செயலர் அருள்பழனி, அமைப்புசாரா ஓட்டுநரணி மாவட்டச் செயலர் சுனில்குமார், மருத்துவர் பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

SCROLL FOR NEXT