திருவண்ணாமலை

உலக மண் தினம் கடைப்பிடிப்பு

DIN

கீழ்நெல்லி வேளாண்மை அறிவியல் மையம் சார்பில், உலக மண் தின நிகழ்ச்சி வந்தவாசியை அடுத்த கீழ்செம்பேடு கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கீழ்நெல்லி வேளாண்மை அறிவியல் மையத் தலைவர் ந.ரமேúஷ்ராஜா தலைமை வகித்தார். அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் (வேளாண்மை) வே.சுரேஷ் வரவேற்றார்.
மண் வளம் காத்தலின் அவசியம், வேளாண் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து வந்தவாசி வட்டார வேளாண் உதவி 
அலுவலர் பி.பெருமாள், தோட்டக்கலை துறை சார்ந்த மானியத் திட்டங்கள் குறித்து வந்தவாசி வட்டார தோட்டக்கலை அலுவலர் எஸ்.சீனிவாசன் ஆகியோர் விளக்கிப் பேசினர்.
இயற்கை விவசாயம் குறித்து வழூர் முன்னோடி விவசாயி வி.வாசுதேவன், மண் பரிசோதனையின் அவசியம் குறித்து அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர்(உழவியல்) பி.ராஜேஷ், மண் சேகரிப்பு முறை குறித்து அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் (பயிர் பாதுகாப்பு) ப.நாராயணன் ஆகியோர் விளக்கிக் கூறினர். அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் (மனையியல்) மார்க்ரெட் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT