திருவண்ணாமலை

ஆட்டோ கவிழ்ந்ததில் ஒருவர் சாவு: 3 பேர் பலத்த காயம்

DIN

வேட்டவலம் அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் ஒருவர் இறந்தார். 3 பேர் பலத்த காயமடைந்தனர்.
வேட்டவலத்தை அடுத்த ஜமீன்கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் கிருஸ்துராஜ் (45). வேட்டவலத்தை அடுத்த அரியலூர் பகுதியைச் சேர்ந்த மரியதாஸ் மகன் ரவி, சஞ்சைநாதன் மகன் அந்தோனிசாமி, தாஸ் மகன் அந்தோனி. இவர்கள் 4 பேரும் சனிக்கிழமை வேட்டவலத்தை அடுத்த தலவாய்குளம் கிராமத்தில் இருந்து ஜமீன்கூடலூர் கிராமம் நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர்.
வேட்டவலத்தை அடுத்த ராஜந்தாங்கல் பகுதியில் உள்ள திருவண்ணாமலை - விழுப்புரம் சாலை அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த 4 பேரையும் பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி கிருஸ்துராஜ் இறந்தார். இதுகுறித்து, வேட்டவலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

SCROLL FOR NEXT