திருவண்ணாமலை

பைக் மோதியதில் விவசாயி சாவு

DIN

வேட்டவலம் அருகே அடையாளம் தெரியாத பைக் மோதியதில் நடந்து சென்ற விவசாயி உயிரிழந்தார்.
வேட்டவலத்தை அடுத்த ராஜாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் மகன் நாராயணசாமி (55). விவசாயியான இவர், வெள்ளிக்கிழமை நிலத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். ராஜாபாளையம் பகுதியில் உள்ள திருவண்ணாமலை - விழுப்புரம் சாலையில் சென்றபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத இரு சக்கர வாகனம் நாராயணசாமி மீது மோதியது.
இதனால், பலத்த காயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், அங்கு அவர் சனிக்கிழமை இறந்தார். இதுகுறித்து வேட்டவலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

SCROLL FOR NEXT