முகப்பு
திருவண்ணாமலை

யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் சங்கீத உபன்யாசம், பக்தி இன்னிசை நிகழ்ச்சி

திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் பகவானின் நூற்றாண்டு விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை சங்கீத உபன்யாசம், பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றன.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 6:24 AM
பகிர்:

திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் பகவானின் நூற்றாண்டு விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை சங்கீத உபன்யாசம், பக்தி 
இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றன.
திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் பகவானின் நூற்றாண்டு ஜெயந்தி விழா 2017 நவம்பர் 30-ஆம் தேதி தொடங்கி, 2018 டிசம்பர் வரை நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக, ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமார்  சன்னதியில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
சங்கீத உபன்யாசம்: மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை பகவானின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில், யோகி ராம்சுரத்குமார் என்ற தலைப்பில் சென்னை பி.சுசித்ரா குழுவினரின் சங்கீத உபன்யாச நிகழ்ச்சி நடைபெற்றது.
மாலை 6.15 மணி முதல் இரவு 8.15 மணி வரை சகோதரிகளான சண்முகப்பிரியா, ஹரிப்பிரியா மற்றும் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த 2 நிகழ்ச்சிகளிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை ஆஸ்ரமத் தலைவரும், ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுமான டி.எஸ்.அருணாச்சலம், அறங்காவலர்கள் மா தேவகி, ஆர்.விஜயலட்சுமி, ஜி.ராஜேஸ்வரி, ஜி.சுவாமிநாதன், டி.எஸ்.ராமநாதன், பி.ஏ.ஜி.குமரன், டி.கணபதி சுப்பிரமணியன், தன்னார்வலர் ஆர்.எஸ்.இந்திரஜித் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.