திருவண்ணாமலை

சாலை விபத்தில் விவசாயி சாவு

DIN

கீழ்பென்னாத்தூர் அருகே மொபெட் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் விவசாயி இறந்தார்.
கீழ்பென்னாத்தூரை அடுத்த தேவனந்தல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரங்கன் (58). இவர், வெள்ளிக்கிழமை காலை நிலத்தில் விளைந்த பூக்களை மூட்டை கட்டி விற்பதற்காக மொபெட்டில் திருவண்ணாமலை நோக்கி சென்றுகொண்டிருந்தார். சிறிது தொலைவு சென்றதும் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மொபெட் மீது மோதியதாகத் தெரிகிறது. இதனால், பலத்த காயமடைந்த ரங்கன், அதே இடத்தில் இறந்தார். தகவலறிந்த கீழ்பென்னாத்தூர் போலீஸார் விரைந்து சென்று  சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறு பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து, மொபெட் மீது பின்னால் வந்து மோதியதுடன், மோட்டார் சைக்கிளை  அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்வரை போலீஸார் தேடி 
வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT