திருவண்ணாமலை

ரஃபேல் விமான பேர விவகாரம்: காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

DIN

திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், ரஃபேல் விமான பேர விவகாரம்,  மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை, அண்ணா சிலை எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்டத் தலைவர் செங்கம் ஜி.குமார் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் பி.எஸ்.விஜயகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கலீம், எம்.கே.காமராஜ், வடக்கு மாவட்டத் தலைவர் வி.பி.அண்ணாமலை, தெற்கு மாவட்ட துணைத் தலைவர் டி.சீனுவாசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.செந்தமிழ்அரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர் என்.வெற்றிச்செல்வன் வரவேற்றார்.
இதில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவருமான எம்.கிருஷ்ணசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார்.
தொடர்ந்து, பாஜக ஆட்சியை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், ரஃபேல் போர் விமானம் வாங்கியதில் நடைபெற்றுள்ள ரூ.1,670 கோடி ஊழல் குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 
இதில், திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

SCROLL FOR NEXT