திருவண்ணாமலை

மக்களவைத் தேர்தலுடன் சட்டப் பேரவை தேர்தலும் நடைபெறும் சூழல் உள்ளது: ஜி.கே.வாசன்

DIN

மக்களவைத் தேர்தலுடன் தமிழக சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடைபெறும் சூழல் உள்ளது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
கீழ்பென்னாத்தூரை அடுத்த மேக்களூர் கிராமத்தில் தமாகா கட்சிக் கொடியேற்று விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. விழாவில், கலந்து கொண்ட அந்தக் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
பெட்ரோல் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றால்தான், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேறும். மக்களவைத் தேர்தலுடன் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலும் நடைபெறும் சூழல் உள்ளது என்றார். பேட்டியின்போது, தமாகா மாவட்டத் தலைவர் மணிவர்மா, துணைத் தலைவர் டி.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட இளைஞரணித் தலைவர் அருள்வர்மா, மாவட்டப் பொருளாளர் ராயர் கிருஷ்ணமூர்த்தி, திருவண்ணாமலை நகரத் தலைவர் முத்தலீப் ஆகியோர்
உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT