திருவண்ணாமலை

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
2018 ஜனவரி 1-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, மாவட்டத்தில் உள்ள 860 ஊராட்சிகளிலும் சனிக்கிழமை சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த முகாம்களில் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை வாக்காளர்கள் பலர் சரிபார்த்தனர். மேலும், புதிதாக பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் தொடர்பான மனுக்களையும் பொதுமக்கள் அளித்தனர்.
ஆரணி பகுதியில்...: ஆரணி பகுதியில் காட்டுகாநல்லூர், கண்ணமங்கலம், ஆரணி நகரம், இந்திரவனம் மற்றும் சேத்துப்பட்டு பழம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான முகாமை மத்திய தேர்தல் பார்வையாளர் சந்தோஷ்மிஸ்ரா பார்வையிட்டு ஆய்வு செய்தார். உதவி ஆட்சியர் (பயிற்சி) மு.பிரதாப், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் உமாமகேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசபாபதி, ஆரணி வட்டாட்சியர் கிருஷ்ணசாமி, நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பையில் புழுதிப் புயல்: விளம்பரப் பதாகை சரிந்ததில் 4 பேர் பலி!

4-ஆம் கட்ட தேர்தல்: 62.84% வாக்குப்பதிவு

ஒரு நாளில் 3 முறை உடை மாற்றுகிறார், விலையோ லட்சம், யார் வாங்கித் தருகிறார்கள்? ராகுல் கேள்வி!

விராட் கோலியை மீண்டும் ஆர்சிபியின் கேப்டனாக நியமிக்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

சீர்திருத்தப் பள்ளிக்கு பதில் சிறையில் அடைக்கப்பட்ட 9,600 சிறார்கள்: ஆய்வில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT