திருவண்ணாமலை

கடலாடி - செங்கம் சாலையில் மரக்கன்றுகள் நடும் பணி

DIN

கலசப்பாக்கத்தை அடுத்த கடலாடி ஊராட்சி சார்பில், கடலாடி - செங்கம் சாலையில் பல்வேறு மரக்கன்றுகள் நடும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
கடலாடி - செங்கம் சாலையின் இருபுறமும் சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு கொய்யா, இலுப்பை, வேம்பு, மா, புளி, புங்கன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட நிழல் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டன. சமூக ஆர்வலர் ஜெகந்நாதன், ஊராட்சிச் செயலர் செந்தில் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்ட பணியாளர்கள் மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT