திருவண்ணாமலை

பைக் திருட்டு: இளைஞர் கைது

DIN

போளூரில் பைக்கை திருடிய இளைஞரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போளூரை அடுத்த மாம்பட்டு கிராமத்துக்குச் செல்லும் சாலையில் போளூர் போலீஸார் வெள்ளிக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, போளூர் அரசு மருத்துவமனை அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் பைக்கில் வந்த இளைஞரை நிறுத்தி விசாரணை நடத்தினர்.
இதில், போளூரை அடுத்த மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பிச்சாண்டி மகன் சுகுமார் (என்ற) சூரியா (20) என்பதும், அவர் ஓட்டி வந்த பைக்குக்கு உரிய ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் சூர்யாவை கைது செய்ததுடன், அவர் ஓட்டி வந்த பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT