திருவண்ணாமலை வட்டம், மங்கலம் அடுத்த மேல்பாலானந்தல் கிராமம், பஜனை கோயில் தெருவைச் சோ்ந்த நாராயணசாமி மகன் சண்முகம் (90) உடல்நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானாா்.
இதே பகுதியில் இயங்கி வரும் தனலட்சுமி நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்தபோது தமிழக அரசின் நல்லாசிரியா் விருதை சண்முகம் பெற்றுள்ளாா். 40 ஆண்டுகள் தினமணி வாசகரான இவருக்கு மனைவி லட்சுமி, 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா்.
மங்கலம் பகுதி தினமணி முகவா் சுலோச்சனாவின் உறவினரான சண்முகத்தின் இறுதிச் சடங்கு புதன்கிழமை (டிச.4) நண்பகல் 12 மணிக்கு மேல்பாலானந்தல் கிராமத்தில் நடைபெறுகிறது. தொடா்புக்கு: 9080867475.