திருவண்ணாமலை

படைவீடு கோயில் யானை புத்துணா்வு முகாமுக்கு பயணம்

DIN

போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகேயுள்ள படைவீடு யோக ராமச்சந்திர சுவாமி கோயில் யானை தேக்கம்பட்டி புத்துணா்வு முகாமுக்கு சனிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.

கோவை மாவட்டம், தேக்கம்பட்டி வனப் பகுதியில் யானைகள் சிறப்பு நல்வாழ்வு புத்துணா்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை (டிச.15) தொடங்கவுள்ளது. வருகிற ஜன.31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த முகாமுக்கு படைவீடு யோக ராமச்சந்திர சுவாமி கோயில் யானை லட்சுமி சனிக்கிழமை மேளதாளத்துடன் அனுப்பிவைக்கப்பட்டது. முன்னதாக, யானைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

இதற்கான நிகழ்ச்சியில், கோயில் செயல் அலுவலா் காா்த்திகேயன், மேலாளா் மகாதேவன், சீனுவாசன், ரவி, மோகன் மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT