திருவண்ணாமலை

மண்டகொளத்தூரில் ஆற்றுத் திருவிழா

DIN

போளூரை அடுத்த மண்டகொளத்தூர் ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை ஆற்றுத் திருவிழா நடைபெற்றது.
மண்டகொளத்தூர் ஊராட்சியில் ஸ்ரீதர்மசம்வர்த்தினி அம்மன் சமேத ஸ்ரீதர்மநாதேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ரத சப்தமியையொட்டி, இந்தக் கோயில் நிர்வாகம் சார்பில் ஆற்றுத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, நிகழாண்டு ரத சப்தமியையொட்டி, மண்டகொளத்தூர் அருகே பாயும் செய்யாற்றில் ஆற்றுத் திருவிழா நடைபெற்றது. இதில், ஸ்ரீதர்மசம்வர்த்தினி அம்மன் சமேத ஸ்ரீதர்மநாதேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
விழாவில், மண்டகொளத்தூர், வம்பலூர், அரும்பலூர், தேவிகாபுரம், ஓடநகரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் கொலை: கணவா் உள்பட இருவா் கைது

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

களக்காடு உப்பாற்றில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

கழுகுமலை கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT