திருவண்ணாமலை

செங்கம் ஒன்றியத்தில் தனி நபர் இல்லக் கழிப்பறை கட்டும் பணி ஆய்வு

DIN

செங்கம் ஒன்றியத்தில் தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டும் பணியை வட்டார வளர்ச்சி அலுவலர் பழநி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 44 கிராம ஊராட்சிகளில் 3,064 பயனாளிகளுக்கு தமிழக அரசின் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் வரும் 21-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட உள்ளன.
இந்தப் பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் பழநி சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, கழிப்பறை வசதி இல்லாத வீடுகளின் உரிமையாளர்கள் விண்ணப்பம் அளித்தால் உடனடியாக இலவச கழிப்பறை கட்டுவதற்கான ஆணை வழங்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் பழநி பொதுமக்களிடம் கூறினார்.
உடன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், பணி மேற்பார்வையாளர்கள் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT