திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் உள்பட மாவட்டத்தின் முக்கிய சிவன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
அருணாசலேஸ்வரர் கோயில் பெரிய நந்தி, கொடி மரம் எதிரே உள்ள நந்தி, மூலவர் சன்னதி எதிரே உள்ள நந்தி உள்பட கோயிலில் உள்ள 8-க்கும் மேற்பட்ட நந்தி பகவான்களுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.
வேட்டவலம் அகத்தீஸ்வரர் கோயிலில் மூலவர் அகத்தீஸ்வரர், தர்மசம்வர்த்தினி அம்பாள், பிரதான நந்திக்கு பிரதோஷ பூஜைகள் நடைபெற்றன.
ஆவூரில் உள்ள ஆனந்தவல்லி உடனுறை திருவகத்தீஸ்வரர் கோயிலில் மூலவர் திருவகத்தீஸ்வரர், ஆனந்தவல்லி, பிரதான நந்திக்கு பிரதோஷ பூஜை நடைபெற்றது.