திருவண்ணாமலை

ஆணவப் படுகொலையைக் கண்டித்து விசிகவினர் ஆர்ப்பாட்டம்

ஆணவப் படுகொலையைக் கண்டித்து, திருவண்ணாமலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

DIN

ஆணவப் படுகொலையைக் கண்டித்து, திருவண்ணாமலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாநில செய்தித் தொடர்பாளர் கு.கா.பாவலர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர்கள் பி.கா.அம்பேத்வளவன், பு.செல்வம், ம.கு.பகலவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை தொகுதிச் செயலர் நியூட்டன் வரவேற்றார்.
இதில், தமிழகத்தில் தொடரும் சாதிய ஆணவப் படுகொலைகளைக் கண்டித்தும், அவற்றைத் தடுக்க மத்திய - மாநில அரசுகள் தனிச் சட்டம் இயற்றக் கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.
கல்வி, பொருளாதார இயக்க மாநிலச் செயலர் வழக்குரைஞர் க.மோகன், மாவட்ட செய்தித் தொடர்பாளர்கள் பெ.சாரதி, ஜெ.சங்கதமிழன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நகரச் செயலர் தேவா (எ) தேவேந்திரன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

SCROLL FOR NEXT